Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தேனி/ மக்களுடன் முதல்வர் திட்ட மனுக்கள் பெறும் முகாம்

மக்களுடன் முதல்வர் திட்ட மனுக்கள் பெறும் முகாம்

மக்களுடன் முதல்வர் திட்ட மனுக்கள் பெறும் முகாம்

மக்களுடன் முதல்வர் திட்ட மனுக்கள் பெறும் முகாம்

ADDED : ஜூலை 19, 2024 06:30 AM


Google News
ஆண்டிபட்டி: மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் பொதுமக்களின் குறை தீர்ப்புக்கான மனுக்கள் பெறும் முகாம் ஆண்டிபட்டி ஒன்றியம் தெப்பம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. எம்.எல்.ஏ., மகாராஜன் துவக்கி வைத்தார்.மாவட்ட பிற்பட்டோர் நல அலுவலர் வெங்கடேசன், ஊரக வளர்ச்சி துறை உதவி இயக்குனர் பழனிவேல், திட்ட இயக்குனர் அபிதா ஹனிப், ஆண்டிபட்டி தாசில்தார் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட தெப்பம்பட்டி, பாலக்கோம்பை, ராசக்காள்பட்டி, ராமகிருஷ்ணாபுரம், பழைய கோட்டை ஊராட்சிகளை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

பட்டா மாறுதல், முதியோர் பென்ஷன், மகளிர் உரிமைத்தொகை, வாரிசு சான்று, இறப்பு சான்று கேட்டும், பல்வேறு துறைகள் சார்பில் செயல்படுத்தப்படும் அரசின் நலத்திட்டங்களில் தங்களை பயனாளிகளாக்க வலியுறுத்தியும் 500க்கும் மேற்பட்டவர்கள் மனுக்கள் கொடுத்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us