ADDED : ஜூன் 28, 2024 12:17 AM

போடி : போடி ஜ.கா.நி., மேல்நிலைப் பள்ளியில் குழந்தை திருமணம், போதைப் பொருளால் ஏற்படும் விளைவுகள் குறித்து மாணவர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது.
சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் டி.எஸ்.பி., சக்திவேல், போடி டி.எஸ்.பி., பெரியசாமி தலைமை வகித்தனர். பள்ளி தலைவர் ராஜகோபால், செயலாளர் ராமசுப்பிரமணியம், தலைமை ஆசிரியர் ராமசுப்பிரமணி முன்னிலை வகித்தனர்.
குழந்தை திருமணத்தால் ஏற்படும் பிரச்னைகள், போதை பொருட்களால் ஏற்படும் விளைவுகள் குறித்து பேசினார். எஸ்.ஐ.,க்கள் சுப்பையன், ராஜா. ரகு. பள்ளி உதவி தலைமை ஆசிரியர்கள் ஒண்டிவீரன். ரத்தினவேல் பாண்டியன் உட்பட பலர் பங்கேற்றனர்.