Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தேனி/ சுருளி அருவி தண்ணீரை சுத்திகரித்து குடிநீராக வழங்க நடவடிக்கை தேவை குடிநீர் வாரியம் ஆய்வு செய்ய வலியுறுத்தல்

சுருளி அருவி தண்ணீரை சுத்திகரித்து குடிநீராக வழங்க நடவடிக்கை தேவை குடிநீர் வாரியம் ஆய்வு செய்ய வலியுறுத்தல்

சுருளி அருவி தண்ணீரை சுத்திகரித்து குடிநீராக வழங்க நடவடிக்கை தேவை குடிநீர் வாரியம் ஆய்வு செய்ய வலியுறுத்தல்

சுருளி அருவி தண்ணீரை சுத்திகரித்து குடிநீராக வழங்க நடவடிக்கை தேவை குடிநீர் வாரியம் ஆய்வு செய்ய வலியுறுத்தல்

ADDED : ஜூலை 26, 2024 12:12 AM


Google News
கம்பம் : சுருளி அருவியிலிருந்து வெளியேறும் தண்ணீரை சுத்திகரித்து கம்பம் பகுதி கிராமங்களுக்கு குடிநீர் வினியோகம் செய்ய குடிநீர் வாரியம் முன்வர வேண்டும் என ஊராட்சி நிர்வாகங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

கம்பம் பள்ளத்தாக்கில் உள்ள நகரங்களுக்கு, லோயர் கேம்பில் முல்லைப் பெரியாற்றில் பம்பிங் செய்து குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. இது தவிர உள்ளாட்சி அமைப்புகள் முல்லைப் பெரியாற்றில் ஆங்காங்கே உறைகிணறு அமைத்தும் குடிநீர் வினியோகம் செய்கின்றனர். ஆனால் ஊராட்சிகளுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வினியோகம் இதுவரை இல்லை.

சுருளி அருவியில் ஹைவேவிஸ், மணலாறு, வெண்ணியாறு, இரங்கலாறு அணைகளில் சேகரமாகும் தண்ணீர் மழை காலங்களில் வீணாகி வருகிறது. ஆண்டிற்கு 500 மி.கன அடி தண்ணீர் சுருளி அருவி வழியாக வந்து முல்லைப் பெரியாற்றில் கலக்கிறது.

எனவே, சுருளி அருவி அருகே தடுப்பணை கட்டி, குடிநீர் பம்பிங் செய்து சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கம்பம் பகுதி ஊராடசிகளுக்கு சப்ளை செய்யலாம். இதன்மூலம் கம்பம் பள்ளத்தாக்கில் உள்ள கிராமங்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் கிடைக்கும். தட்டுப்பாடும் நீங்கும்.

மேலும் மாசுபடாத சுவையான குடிநீர் கிடைக்கும், கோடை காலங்களில் மட்டும் அருவியில் தண்ணீர் விழாது . ஆண்டிற்கு 9 மாதங்கள் தண்ணீர் கிடைக்கும்.

வெள்ளம் பெருக்கெடுத்து ஒடும் மழைகாலங்களில் தண்ணீரை தேக்கி வைத்து பயன்படுத்தலாம். குடிநீர் வடிகால் வாரியம் இந்த திட்டத்தை ஆய்வு செய்ய முன்வர வேண்டும் என்று இப்பகுதி ஊராட்சி நிர்வாகங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

தற்போது லோயர் கேம்பிலிருந்து சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை வழங்கினாலும், தேவைக்கேற்ப வழங்குவதில்லை என புகார் கூறுகின்றனர். எனவே சுருளி அருவியில் இருந்து முல்லைப்பெரியாற்றில் கலக்கும் தண்ணீரை தேக்கி, சுத்திகரித்து வழங்க வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us