ADDED : ஜூன் 07, 2024 06:37 AM
மூணாறு: மூணாறு அருகே மலைவாழ் மக்கள் வசிக்கும் இடமலைகுடி ஊராட்சியில் வெள்ளவராகுடியை சேர்ந்தவர் மேகவர்ணன் 31. இவர் மே 30ல் வீட்டின் அருகே விஷம் குடித்து விட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடந்தார்.
அவரை தேனி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை இறந்தார். மூணாறு போலீசார் விசாரிக்கின்றனர்.