ADDED : ஜூலை 03, 2024 05:35 AM
தேனி : பெரியகுளம் தென்கரை வடக்கு அக்ரஹாரம் ஜலீல்ரகுமான் 79. இவர் தனது மனைவியுடன் ஜூன் 21ல் சென்னையில் உள்ள தனது மூத்த மகளை பார்க்கச் சென்றனர்.
பின் ஜூன் 27 ல் அலைபேசியில் தொடர்பு கொண்டு வீட்டிற்கு அருகில் வசிக்கும் கண்ணன், மாடி வீட்டு விளக்கு 2 நாட்களாக எரிகிறது என தெரிவித்துள்ளார்.
ஜூன் 28 ல் வீட்டிற்கு வந்த போது பீரோவின் பூட்டு உடைக்கப்பட்டு, ரூ.1500 உட்பட ரூ.4500 மதிப்புள்ள வெள்ளிப்பொருட்களை திருடுபோனது தெரியவந்தது.
புகாரில், தென்கரை போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.