ADDED : ஜூன் 19, 2024 05:06 AM
ஆண்டிபட்டி : ஆண்டிபட்டி அம்மச்சியாபுரம் வாய்க்கால்பட்டி காலனியை சேர்ந்தவர் ஈஸ்வரன் 47, தனது வீட்டில் 10 வெள்ளாடுகள் வளர்த்து வருகிறார்.
வீட்டில் பின்புறம் மரத்தடியில் 10 வெள்ளாடுகளை கட்டி வைத்து தீவனம் வைத்துவிட்டு காலையில் வேலைக்கு சென்று விட்டார். மதியம் ஆடுகளுக்கு தீவனம் வைப்பதற்காக வந்துள்ளார். அப்போது 10 கிலோ எடையுள்ள கருப்பு கிடாவை காணவில்லை. அக்கம் பக்கம் தேடி பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை.
இது குறித்து ஈஸ்வரன் புகாரில் போலீசார் இதே ஊரைச்சேர்ந்த நந்தகுமார் 22,யை கைது செய்தனர்.