/உள்ளூர் செய்திகள்/தேனி/ முறையான ஆவணங்கள் இன்றி இயக்கிய 15 ஆட்டோக்கள் பறிமுதல் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஒப்படைப்பு முறையான ஆவணங்கள் இன்றி இயக்கிய 15 ஆட்டோக்கள் பறிமுதல் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஒப்படைப்பு
முறையான ஆவணங்கள் இன்றி இயக்கிய 15 ஆட்டோக்கள் பறிமுதல் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஒப்படைப்பு
முறையான ஆவணங்கள் இன்றி இயக்கிய 15 ஆட்டோக்கள் பறிமுதல் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஒப்படைப்பு
முறையான ஆவணங்கள் இன்றி இயக்கிய 15 ஆட்டோக்கள் பறிமுதல் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஒப்படைப்பு
ADDED : ஜூன் 14, 2024 05:43 AM

தேனி: பழனிசெட்டிபட்டியில் பல்வேறு இடங்களில் வாகன தணிக்கை நடத்தி முறையான ஆவணங்கள் இன்றி இயக்கப்பட்ட 15 ஆட்டோக்களை போலீசார் பறிமுதல் செய்து வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
தேனி எஸ்.பி., சிவபிரசாத் உத்தரவில், பழனிசெட்டிபட்டி இன்ஸ்பெக்டர் சிவராமகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் பழனிசெட்டிபட்டி பூதிப்புரம் ரோடு, கம்பம் ரோடு, போடி ரோடு, கோடாங்கிபட்டி, அரண்மனைப்புதுார், கொடுவிலார்பட்டி பகுதிகளில் நேற்றும், நேற்று முன்தினமும் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.இதில் ஆட்டோக்களில் இன்சூரன்ஸ் இல்லாதது, 'பெர்மிட்' இன்றியும், வாகன புதுப்பித்தலுக்கான சான்றிதழ் (எப்.சி.,) டிரைவிங் லைசென்ஸ் இன்றி வாகனத்தை இயக்கியது என விதிமீறிய ஏழு ஆட்டோக்களை ஜூன் 12லிலும், எட்டு ஆட்டோக்களை நேற்றும் பறிமுதல் செய்தனர்.
பறிமுதல் செய்த 15 ஆட்டோக்கள் சிறப்பு எஸ்.ஐ., ஏட்டுக்கள் பாதுகாப்புடன், தேனி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஒப்படைத்தனர். இதனை தேனி வட்டார போக்குவரத்து இன்ஸ்பெக்டர் அழகேசன் ஆவணங்களை ஆய்வு செய்து, ஆன்லைன் அபராதம் விதிக்கும் நடைமுறைகளுக்கு ஒப்புதல் அளித்தார்.
இன்ஸ்பெக்டர் சிவராமகிருஷ்ணன் கூறுகையில், இரண்டு நாட்களுக்கு முன் ஆட்டோ பஸ் விபத்து ஏற்பட்டது. இதில் ஆட்டோவில் பயணித்தவர்கள் படுகாயமடைந்தனர். அந்த ஆட்டோவில் இனஸ்சூரன்ஸ் இல்லை என தெரியவந்தது.
இதனால் விபத்து நடக்கும் போது உயிருக்கும் உத்தரவாதம் இல்லாத நிலை உள்ளது. இதனால் விபத்துக்களை தவிர்க்க எஸ்.பி., உத்தரவில் முறையான ஆவணங்கள் இல்லாத வாகனங்களை தணிக்கை செய்து, நடவடிக்கை எடுத்து வருகிறோம். தணிக்கை பணிகள் தொடர்ந்த நடைபெறும்.', என்றார்.