Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தஞ்சாவூர்/ சிங்கப்பூரில் இருந்து வந்தவர் சில மணி நேரத்தில் உயிரிழப்பு

சிங்கப்பூரில் இருந்து வந்தவர் சில மணி நேரத்தில் உயிரிழப்பு

சிங்கப்பூரில் இருந்து வந்தவர் சில மணி நேரத்தில் உயிரிழப்பு

சிங்கப்பூரில் இருந்து வந்தவர் சில மணி நேரத்தில் உயிரிழப்பு

ADDED : ஜூலை 02, 2025 08:14 AM


Google News
Latest Tamil News
சேதுபாவாசத்திரம் :சிங்கப்பூரில் இருந்து சொந்த ஊர் வந்தவர் சில மணிநேரத்தில் விபத்தில் உயிரிழந்தார்.

தஞ்சாவூர் மாவட்டம், ஆண்டிக்காடு பகுதியை சேர்ந்தவர் கவுதமன், 27; சிங்கப்பூரில் வேலை பார்த்து வந்தார். விடுமுறைக்காக நேற்று முன்தினம் இரவு, 7:00 மணிக்கு சொந்த ஊருக்கு வந்தார். இரண்டாம்புளிக்காடு பகுதியில் டீக்கடை நடத்தி வரும் தன் தந்தை ரவிசந்திரனை பார்க்க, வீட்டில் இருந்து டூ -- வீலரில் சென்றார்.

இரவு, 9:00 மணிக்கு சேதுபாவாசத்திரத்தில் இருந்து பட்டுக்கோட்டை நோக்கி வந்த லாரி கவுதமன் மீது மோதியதில், சம்பவ இடத்திலேயே இறந்தார். நிற்காமல் சென்ற லாரியை அப்பகுதி இளைஞர்கள் 3 கி.மீ., துாரம் விரட்டி பிடித்து, சேதுபாவாசத்திரம் போலீசில் ஒப்படைத்தனர்.

கவுதமனுக்கு திருமணமாகி சுபஸ்ரீ, 23, என்ற மனைவி உள்ளார். வெளிநாட்டில் இருந்து சொந்த ஊர் வந்த சில மணி நேரத்திலேயே விபத்தில் கவுதமன் பலியான சம்பவம் கிராம மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us