/உள்ளூர் செய்திகள்/தஞ்சாவூர்/ கோவிலுக்கு பாத யாத்திரை சென்றவர்கள் மீது வேன் மோதல் ஒரே கிராமத்தை சேர்ந்த 4 பெண்கள் உட்பட ஐந்து பேர் பலி கோவிலுக்கு பாத யாத்திரை சென்றவர்கள் மீது வேன் மோதல் ஒரே கிராமத்தை சேர்ந்த 4 பெண்கள் உட்பட ஐந்து பேர் பலி
கோவிலுக்கு பாத யாத்திரை சென்றவர்கள் மீது வேன் மோதல் ஒரே கிராமத்தை சேர்ந்த 4 பெண்கள் உட்பட ஐந்து பேர் பலி
கோவிலுக்கு பாத யாத்திரை சென்றவர்கள் மீது வேன் மோதல் ஒரே கிராமத்தை சேர்ந்த 4 பெண்கள் உட்பட ஐந்து பேர் பலி
கோவிலுக்கு பாத யாத்திரை சென்றவர்கள் மீது வேன் மோதல் ஒரே கிராமத்தை சேர்ந்த 4 பெண்கள் உட்பட ஐந்து பேர் பலி
ADDED : ஜூலை 17, 2024 09:16 PM

தஞ்சாவூர்:புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே கண்ணுக்குடிப்பட்டி கிராமத்தை சேர்ந்த பலரும், திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு, ஆண்டுதோறும் விரதம் இருந்து, ஆடி பிறப்பை முன்னிட்டு, பாத யாத்திரையாக செல்வது வழக்கம். நேற்று அதிகாலை, 85 பேர் பாத யாத்திரையாக ஊரில் இருந்து புறப்பட்டு, தனித்தனி குழுவாக சென்று கொண்டிருந்தனர்.
நேற்று அதிகாலை 5:00 மணிக்கு, திருச்சி - தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில், தஞ்சாவூர் மாவட்டம் வளப்பக்குடி பகுதியில் சாலையோரமாக நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது, கரூரில் இருந்து, தஞ்சாவூரில் உள்ள கடைகளுக்கு அரிசி மூட்டைகளை இறக்கி விட்டு, மீண்டும் கரூருக்கு திரும்பி கொண்டிருந்த வேன், நடந்து சென்றவர்கள் மீது அடுத்தடுத்து மோதி துாக்கி வீசியபடி, வேகமாக சென்றது.
திடீரென வேன் மோதியதால், அதில் சிக்கிய பலரும் அலறினர். வேனை ஓட்டி வந்த கரூரை சேர்ந்த சவுந்தரராஜன்,38, வாகனத்தை நிறுத்தி, தப்பியோட முயன்றார். அவரை, அங்கிருந்தவர்கள் பிடித்தனர்.
பாத யாத்திரையை சென்ற பலரும், ரத்த வெள்ளத்தில் கிடந்தவர்களை பார்த்து அழுது புலம்பினர். கண் இமைக்கும் நேரத்தில் நடந்த விபத்தில், கண்ணுக்குடிப்பட்டியை சேர்ந்த முத்துசாமி, 60, ராணி, 37, மோகனா, 28, மீனா, 26, ஆகிய நான்கு பேரும் சம்பவ இடத்திலேயே, உடல் நசுங்கி இறந்தனர்.
படுகாயங்களுடன் கிடந்த தனலட்சுமி, 37, சங்கீதா, 21, ஆகியோரை தஞ்சாவூர் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு, அங்கிருந்த வாகனங்களில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
தகவலறிந்து வந்த செங்கிப்பட்டி போலீசார் டிரைவர் சவுந்தரராஜனையும், அவரின் வேனையும் மீட்டனர். இறந்தவர்களின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பினர். சிகிச்சை பெற்ற தனலட்சுமி, சிகிச்சை பலனின்றி இறந்தார். சங்கீதா சிகிச்சை பெற்று வருகிறார். விபத்தை ஏற்படுத்திய, டிரைவர் சவுந்தர்ராஜன் கைது செய்யப்பட்டார்.
விபத்தில் இறந்தவர்களின் நெருங்கிய உறவினர்களுக்கு, தலா 2 லட்சம், காயடைந்தவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என, முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.