Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தென்காசி/ நாய் குறுக்கே புகுந்து விபத்து டூ - வீலரில் சென்ற 2 பேர் பலி

நாய் குறுக்கே புகுந்து விபத்து டூ - வீலரில் சென்ற 2 பேர் பலி

நாய் குறுக்கே புகுந்து விபத்து டூ - வீலரில் சென்ற 2 பேர் பலி

நாய் குறுக்கே புகுந்து விபத்து டூ - வீலரில் சென்ற 2 பேர் பலி

ADDED : ஜூலை 21, 2024 06:55 AM


Google News
திருநெல்வேலி : தென்காசி மாவட்டம், புளியங்குடியைச் சேர்ந்தவர் ஷாகுல் ஹமீது, 53; வெளிநாட்டில் டிரைவராக பணிபுரிந்தார். இவரது உறவினர் முஹமது திவான், 48. இவரும் வெளிநாட்டில் பேக்கரி ஒன்றில் பணிபுரிந்தார்.

இவர்கள் விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்திருந்தனர். ஷாகுல் ஹமீது கண் சிகிச்சைக்காக திருநெல்வேலி தனியார் மருத்துவமனைக்கு நேற்று காலை டூ - வீலரில் சென்றார். அவருடன் முகமது திவானும் உடன் சென்றார். சங்கரன்கோவில் - திருநெல்வேலி சாலையில் ராமையன்பட்டி அருகே சென்றபோது, குறுக்கே ஓடிய நாய் மீது மோதி, நிலை தடுமாறி டூ - வீலரில் இருந்து இருவரும் கீழே விழுந்தனர்.

இதில், ஷாகுல் ஹமீது சம்பவ இடத்திலேயே இறந்தார். முகமது திவான் திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு செல்லும் வழியில் இறந்தார். இருவருக்கும் மனைவி, குழந்தைகள் உள்ளனர்.

மானுார் போலீசார் விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us