/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ சிவகங்கையில் வாலிபரை வெட்டி காரில் கடத்தல் சிவகங்கையில் வாலிபரை வெட்டி காரில் கடத்தல்
சிவகங்கையில் வாலிபரை வெட்டி காரில் கடத்தல்
சிவகங்கையில் வாலிபரை வெட்டி காரில் கடத்தல்
சிவகங்கையில் வாலிபரை வெட்டி காரில் கடத்தல்
ADDED : செப் 16, 2025 04:18 AM
சிவகங்கை: சிவகங்கை கீழவாணியங்குடியை சேர்ந்தவர் விக்னேஷ்குமார் 27. இவர் கூட்டுறவுத்துறை மூலம் செயல்படும் தனியார் ஏஜன்சியில் பணியாளராக உள்ளார்.
இவர் செப். 14ம் தேதி இரவு நன்பர்களுடன் ரோஸ்நகரில் மது அருந்தியுள்ளார். பின்பு நண்பருடன் டூவீலரில் ராகினிப்பட்டியில் மது வாங்கிவிட்டு டூவீலரில் செல்லும் போது பின்னால் வந்த சிலர் விக்னேஷ் குமாரை கீழே தள்ளி தலையில் வெட்டினர்.
பின்பு அவர்கள் வந்த காரில் விக்னேஷ்வரனை ஏற்றி காருக்குள் வைத்து தாக்கி விட்டு ஈசனுார் அருகே விக்னேஷ்குமாரை இறக்கி விட்டுள்ளனர்.
விக்னேஷ்குமார் அருகில் இருந்தவர்கள் உதவியுடன் 108 ஆம்புலன்ஸ் மூலம் சிவகங்கை மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சையில் சேர்ந்தார்.போலீசார் விசாரித்து வருகின்றனர்.