ADDED : ஜன 01, 2024 05:28 AM
திருப்புத்தூர்: திருப்புத்தூரில் மனவளக்கலை மன்ற அறக்கட்டளை சார்பில் உலகநல வேள்வி விழா இன்று நடைபெறுகிறது.
கண்டரமாணிக்கம் ரோட்டில் உள்ள அறிவுத்திருக்கோயிலில் இரவு 6:30 மணிக்கு வேள்வி துவங்குகிறது. அறக்கட்டளை தலைவர் டாக்டர் சி.சுகுமார், செயலர் பேராசிரியர் சுப்பிரமணியன் ஆகியோரால் உலகநல வேள்வி தத்துவம், தவம், உலக நல வாழ்த்து குறித்து விளக்கப்படும். மற்றும் உடற்பயிற்சி குறித்து செயல் விளக்கம் தரப்படும்.