ADDED : செப் 01, 2025 02:24 AM
திருப்புத்தூர்: திருப்புத்தூர் மனவளக்கலை மன்ற அறிவுத் திருக்கோயிலில் மனைவி நல வேட்பு விழா நடந்தது.
எம்.காயத்ரி இறைவணக்கம் பாடினார். அ.சுப்பிரமணியன் துரிய தவம் நடத்தினார். மன்ற தலைவர் சுகுமார் வரவேற்றார். துணைத் தலைவர் அரசரெத்தினம் தலைமை வகித்தார். வேதாத்திரி கவிதை நலம் குறித்து பூங்குன்றன் சிறப்புரை வகித்தார். ஆழியாறு இணை இயக்குநர் பூங்குன்றன் பேசினார். விழாவில் பங்கேற்ற தம்பதிகளை கவுரவித்தனர். பொருளாளர் வாசு நன்றி கூறினார்.