Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ சிங்கம்புணரியில் திருக்கல்யாணம்

சிங்கம்புணரியில் திருக்கல்யாணம்

சிங்கம்புணரியில் திருக்கல்யாணம்

சிங்கம்புணரியில் திருக்கல்யாணம்

ADDED : ஜூன் 06, 2025 02:43 AM


Google News
Latest Tamil News
சிங்கம்புணரி: சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் ஐயனார் கோயிலில் திருக்கல்யாணம் நடந்தது.

சிவகங்கை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட இக்கோயில் வைகாசி விசாகத் திருவிழா ஜூன் 1ல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. 5ம் நாளான நேற்று திருக்கல்யாணம் நடந்தது. மாலை 6:30 மணிக்கு பூரண, புஷ்கலா தேவி, சேவுகப்பெருமாள் ஐயனாருக்கு அலங்காரம் செய்யப்பட்டு திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளினர்.

அங்கு கிராமத்தார்கள் முன்னிலையில் இரவு 7:30 மணிக்கு திருக்கல்யாணம் நடந்தது. கோயில் சிவாச்சாரியார்கள் திருக்கல்யாணத்தை நடத்தி வைத்தனர். தொடர்ந்து ஊஞ்சலாட்டு நிகழ்ச்சி நடந்தது. இன்று கழுவன் திருவிழா நடக்கிறது. ஜூன் 9ஆம் தேதி தேரோட்டமும் 10ம் தேதி பூப்பல்லக்கு உற்ஸவமும் நடக்கிறது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us