Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ நாட்டரசன்கோட்டை அம்மன் கோயிலில் வைகாசி விசாக திருவிழா கொடியேற்றம் 

நாட்டரசன்கோட்டை அம்மன் கோயிலில் வைகாசி விசாக திருவிழா கொடியேற்றம் 

நாட்டரசன்கோட்டை அம்மன் கோயிலில் வைகாசி விசாக திருவிழா கொடியேற்றம் 

நாட்டரசன்கோட்டை அம்மன் கோயிலில் வைகாசி விசாக திருவிழா கொடியேற்றம் 

UPDATED : ஜூன் 02, 2025 04:26 AMADDED : ஜூன் 01, 2025 10:50 PM


Google News
Latest Tamil News
சிவகங்கை:சிவகங்கை மாவட்டம் நாட்டரசன்கோட்டை கண்ணுடைய நாயகி அம்மன் கோயில் வைகாசி விசாக திருவிழா கொடியேற்றம் நடந்தது.

சிவகங்கை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட இக்கோயிலில் வைகாசி விசாக திருவிழா மே 31 மாலை 6:00 மணிக்கு அனுக்கை, விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கியது. நேற்று காலை 10:30 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட கொடி மரத்தில் கொடியேற்றப்பட்டது. அலங்காரத்தில் கோயில் கொடி மரம் முன் அம்மன் எழுந்தருளினார். மாலை 6:00 மணிக்கு அம்மனுக்கு காப்பு கட்டினர். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.தினமும் காலை 9:00 மணிக்கு அம்மன் வெள்ளி கேடகத்திலும், இரவு 7:00 மணிக்கு சிம்மம், காமதேனு, யானை, பூதம், வெள்ளி ரிஷப வாகனத்தில் வீதி உலா நடைபெறும். விழாவின் முக்கிய நிகழ்வாக ஜூன் 7 மாலை 6:00 மணிக்கு கோயில் உட்பிரகாரத்தில் அம்மன் தங்க ரதத்தில் வலம் வருகிறார். ஜூன் 8 மாலை 6:10 மணிக்கு வெள்ளி ரதத்தில் நகரின் முக்கிய வீதிகளில் வலம் வருவார். * ஜூன் 9 ல் தேரோட்டம்:

ஜூன் 9 ல் தேரில் கண்ணுடைய நாயகி அம்மன் எழுந்தருள்வார். காலை 9:25 மணிக்கு தேரோட்டம் துவங்கி,நான்கு ரத வீதிகளை சுற்றி வந்து நிலையை அடையும். ஜூன் 10 ல் காலை பால்குடம் எடுத்தும், பூக்குழி இறங்கியும் பக்தர்கள் நேர்த்தி செலுத்துவர். ஜூன் 11ல் ஊஞ்சல் உற்சவத்துடன் விழா நிறைவு பெறும். ஏற்பாடுகளை தேவஸ்தான கண்காணிப்பாளர் கணபதிராமன் மற்றும் விழா கமிட்டியினர் செய்து வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us