Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ அனுமதியின்றி மஞ்சுவிரட்டு

அனுமதியின்றி மஞ்சுவிரட்டு

அனுமதியின்றி மஞ்சுவிரட்டு

அனுமதியின்றி மஞ்சுவிரட்டு

ADDED : மே 24, 2025 11:25 PM


Google News
எஸ்.புதுார் : எஸ்.புதுார் அருகேயுள்ள பி.அய்யாபட்டி ஆதீனமிளகி ஐயனார் கோயில் வைகாசி உற்ஸவ விழாவை முன்னிட்டு அங்குள்ள கண்மாயில் மஞ்சுவிரட்டு நடத்தப்பட்டது. சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மாடுகள் அவிழ்த்து விடப்பட்டன.

மஞ்சுவிரட்டு அனுமதி இன்றி நடத்தப்பட்டதாக நெடுவயல் வி.ஏ.ஓ., மணிமேகலை அளித்த புகாரில் பி.அய்யாபட்டியைச் சேர்ந்த துரைராஜ், பாக்கியம், சின்னத்தம்பி, பழனிச்சாமி, மற்றொரு பழனிச்சாமி ஆகியோர் மீது உலகம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us