/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ போலி ஆதார், ரேஷன் கார்டு தயாரித்துநிதி நிறுவனத்தில் மோசடி: இருவர் கைது போலி ஆதார், ரேஷன் கார்டு தயாரித்துநிதி நிறுவனத்தில் மோசடி: இருவர் கைது
போலி ஆதார், ரேஷன் கார்டு தயாரித்துநிதி நிறுவனத்தில் மோசடி: இருவர் கைது
போலி ஆதார், ரேஷன் கார்டு தயாரித்துநிதி நிறுவனத்தில் மோசடி: இருவர் கைது
போலி ஆதார், ரேஷன் கார்டு தயாரித்துநிதி நிறுவனத்தில் மோசடி: இருவர் கைது
ADDED : ஜூன் 29, 2025 02:28 AM

சிவகங்கை:சிவகங்கையில் வாலிபர் பெயரில் போலி ஆதார், திருமணமானவராக சித்தரித்து ரேஷன் கார்டு தயாரித்து நிதி நிறுவனத்தில் கடன் பெற்று மோசடி செய்த பெண், தனியார் இ -சேவை மைய உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.
சிவகங்கை காஞ்சிரங்காலைச் சேர்ந்தவர் ஜோதி. இவரது மகன் நரேஷ்குமார் 23. ஒன்றரை ஆண்டுகாக இவர் சவூதியில் வேலை செய்கிறார். தனியார் நிதி நிறுவனத்தில் கடன் பெற தன் ஆதார் கார்டுடன், நாமினியாக மகன் நரேஷ்குமார் பெயரை ஜோதி கொடுத்தார். ஜோதி கொடுத்த ஆவணங்களை தனியார் நிதி நிறுவன ஊழியர் சரி பார்த்தார்.
சவூதியில் வேலை செய்யும் நரேஷ்குமார் பெயரில் போலி ஆதார் கார்டு தயாரித்தும், திருமணம் ஆகாத அவருக்கு மற்றொரு பெண்ணுடன் திருமணம் நடந்தது போல் போலி ஆவணங்களை தயாரித்து போலி ரேஷன் கார்டு பெற்றும், அப்பெண் தனியார் நிதி நிறுவனத்தில் கடன் பெற்றதும், அதில் நாமினியாக நரேஷ்குமார் பெயர் இருப்பதும் குறித்து அந்நிதி நிறுவனத்தின் மற்றொரு ஊழியர் ஜோதியிடம் தெரிவித்தார். ஜோதிக்கு கடன் வழங்கவும் அவர் மறுத்தார்.
இதுகுறித்து ஜோதி சிவகங்கை கலெக்டரிடம் புகார் அளித்தார். போலீசார் விசாரிக்க கலெக்டர் உத்தரவிட்டார்.
இன்ஸ்பெக்டர் அன்னராஜ் மற்றும் போலீசார் விசாரித்தனர். இலந்தகுடிப்பட்டி ரேணுகா சில தனியார் நிதி நிறுவனங்களுக்கு முகவராக இருப்பதும் அதை பயன்படுத்தி நரேஷ்குமார் பெயரில் போலி ரேஷன் கார்டு, அவருக்கும் தன் மகளுக்கும் திருமணம் நடந்தது போல போலி ஆதார் கார்டு தயாரித்து நிதி நிறுவனத்தில் கடன் பெற்றதும் தெரிய வந்தது.
அவரை கைது செய்த போலீசார் அவருக்கு உடந்தையாக ஆதார், ரேஷன் கார்டு தயாரித்து கொடுத்த தனியார் இ -சேவை மைய உரிமையாளர் மதுரை மாங்குளம் பாண்டித்துரையையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கணினி, பிரிண்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டன.