ADDED : ஜன 04, 2024 02:20 AM
சிவகங்கை; சிவகங்கை கம்யூ., அலுவலகத்தில் ஏ.ஐ.டி.யு.சி., ஆட்டோ தொழிற்சங்க கூட்டம் நடந்தது. நகரச் செயலாளர் பாண்டி தலைமை வகித்தார்.
ஏ.ஐ.டி.யு.சி., ஆட்டோ சங்க மாவட்ட செயலாளர் ராஜா, இந்திய கம்யூ.,நகரச் செயலாளர் வழக்கறிஞர் மருது, மாவட்ட துணை செயலாளர் சகாயம் கலந்துகொண்டனர். ஜன.10ம் தேதி சிவகங்கையில் மாவட்ட மாநாடு நடத்துவது என்றும், மோட்டார் வாகன திருத்தச் சட்டத்தை ரத்து செய்யவேண்டும் உள்ளிட்ட கோரிக்கை விவாதிக்கப்பட்டது.