ADDED : செப் 17, 2025 03:21 AM
சிவகங்கை : சிவகங்கை நகர் எஸ்.ஐ., கணேசன் தினசரி சந்தை செக்கடி ஊரணி பகுதியில் ரோந்து சென்றார். அங்கு ஒய்எப்சி தெருவை சேர்ந்த சம்சுதீன் 23, ரபீக்முகமது 29 இருவரும் கையில் வாளுடன் நின்றனர்.
அவர்களை எஸ்.ஐ., உள்ளிட்ட போலீசார் விசாரித்தனர். முறையாக பதில் கூறாமல் வாளை காட்டி மிரட்டியுள்ளனர். இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்த வாளை பறிமுதல் செய்தனர்.