Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ 33 ஆண்டுக்கு பிறகு நடந்த திருவிழா

33 ஆண்டுக்கு பிறகு நடந்த திருவிழா

33 ஆண்டுக்கு பிறகு நடந்த திருவிழா

33 ஆண்டுக்கு பிறகு நடந்த திருவிழா

ADDED : ஜூன் 10, 2025 01:31 AM


Google News
Latest Tamil News
எஸ்.புதுார்: எஸ்.புதுார் அருகே 33 ஆண்டுகளுக்குப் பிறகு நடந்த திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

இவ்வொன்றியத்தில் குன்னத்துார் கிராமத்தில் உள்ள மந்தை அம்மன் கோயில் சாத்திரைத் திருவிழா நடந்தது.

இதையொட்டி மே 25ம் தேதி அம்மனுக்குகாப்பு கட்டப்பட்டு பூச்சொரிதல் நடந்தது. தினமும் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.

திருவிழாவையொட்டி களிமண்ணால் செய்யப்பட்ட மந்தை அம்மனை கோயில் பூஜாரி தலையில் சுமந்து வந்தார். குன்னத்தூர் மந்தையில் வைத்து அம்மனுக்கு வழிபாடு செய்யப்பட்டது.

தொடர்ந்து சேவல் பலியிடப்பட்டு, பொங்கல் வைத்து வழிபாடு நடத்தப்பட்டது. பெண்கள் மாவிளக்கு எடுத்து அம்மனை வழிபட்டனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us