/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/தென்மாப்பட்டு புரவி எடுப்பு விழா: ஜூலை 13 ல் நடக்கும்தென்மாப்பட்டு புரவி எடுப்பு விழா: ஜூலை 13 ல் நடக்கும்
தென்மாப்பட்டு புரவி எடுப்பு விழா: ஜூலை 13 ல் நடக்கும்
தென்மாப்பட்டு புரவி எடுப்பு விழா: ஜூலை 13 ல் நடக்கும்
தென்மாப்பட்டு புரவி எடுப்பு விழா: ஜூலை 13 ல் நடக்கும்
ADDED : ஜூன் 24, 2024 01:40 AM
திருப்புத்தூர் : திருப்புத்துார் அருகே தென்மாபட்டு ஆதினமிளகி அய்யனார் கோயில் புரவி எடுப்பு விழா ஜூலை13ல் நடக்கிறது.
- விழாவை முன்னிட்டு கிராமத்தினர் ஜூன் 21ல் தென்மாப்பட்டு கிராமத்தினர் சவுக்கை திடலில் கூடினர். தொடர்ந்து புரவிகள் அமைக்க வேளாருக்கு பிடிமண் அளித்தனர். ஜூலை 5 மாலை 4:30 மணிக்கு அய்யனார் கோயில் முன் சேங்கை வெட்டு நடக்கும். ஜூலை 12 ல் சாமி அழைத்தபின், புதுப்பட்டியிலிருந்து புரவி எடுத்து புரவி பொட்டலில் சேர்க்கை நடைபெறும். புரவிகளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும். ஜூலை 13 மாலையில் புரவி பொட்டலிலிருந்து புரவிகள் எடுத்து கிராமத்தினர் ஊர்வலமாக கோயில் சென்றடைவர். தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடக்கம். மஞ்சுவிரட்டுடன் மறுநாள் விழா நிறைவு பெறும்.