Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/சிவகங்கை இளைஞரிடம் ஆன்லைனில் மோசடி

சிவகங்கை இளைஞரிடம் ஆன்லைனில் மோசடி

சிவகங்கை இளைஞரிடம் ஆன்லைனில் மோசடி

சிவகங்கை இளைஞரிடம் ஆன்லைனில் மோசடி

ADDED : ஜன 04, 2024 02:09 AM


Google News
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்தவர் ஷாஜஹான் 37. இவர் பேஸ்புக்கில் வந்த விளம்பரத்தில் இருந்த லோன் ஆப்பை கிளிக் செய்தவுடன் ஷாஜகான் வங்கிக்கணக்கில் மூன்று தவணையாக ரூ. ஆயிரத்து 800 வீதம் ரூ.5 ஆயிரத்து 400 வரவு ஆகியுள்ளது.

பிறகு ஷாஜஹான் அவர்கள் அனுப்பிய UPI ID யில் ரூ.9 ஆயிரம் திருப்பி செலுத்தியுள்ளார். ஜன.2ம் தேதி வாட்ஸ் ஆப்பிலும்,தொலைபேசி எண்களிலிருந்து தொடர்பு கொண்ட அடையாளம் தெரியாத நபர் மீண்டும் பணம் கேட்டு மிரட்டியுள்ளார்.

பணம் செலுத்த மறுத்தால் புகைப்படத்தை மார்பிங் செய்து இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டியுள்ளார். ஷாஜஹான் சிவகங்கை சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார். சைபர் கிரைம் போலீசார் விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us