ADDED : ஜன 12, 2024 12:33 AM

மானாமதுரை : மானாமதுரை அலங்காரகுளம் மயூரநாதன் குமரகுருதாச சுவாமி கோயிலில் மயூர வாகன சேவன விழாவை முன்னிட்டு நேற்று காலை 6:00 மணிக்கு குமரகுருதாச சுவாமி பாடல் பாராயணமும், மாலை 6:30 மணிக்கு வஜ்ராயுதத்திற்கு 11 வகையான பொருட்களால் சிறப்பு திருமஞ்சனம் செய்யப்பட்டு அபிஷேக,ஆராதனை தீபாராதனை,இரவு 7:00 மணிக்கு சுவாமி புஷ்ப பல்லக்கில் கோயிலை வலம் வரும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் மானாமதுரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டனர்.