Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/கல்லுாரியில் கருத்தரங்கம்

கல்லுாரியில் கருத்தரங்கம்

கல்லுாரியில் கருத்தரங்கம்

கல்லுாரியில் கருத்தரங்கம்

ADDED : ஜன 05, 2024 04:48 AM


Google News
Latest Tamil News
சிவகங்கை : சிவகங்கை அரசு மகளிர் கலைக் கல்லுாரியில் வேதியியல் துறை சார்பாக நானோ காம்போசைட்களின் புதுமையான வளர்ச்சி குறித்த கருத்தரங்கு நடந்தது.

முதல்வர் இந்திரா தலைமை வகித்தார். வேதியியல் துறை தலைவர் முத்துமணி, பேராசிரியர் பூங்கொடி நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர்.

புதுச்சேரி பல்கலை வேதியியல் பேராசிரியர் அன்பழகன் கலந்துகொண்டார். உயிர் நானோ பொருட்களில் சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்து அழகப்பா பல்கலை பேராசிரியர் தம்பிதுரை பேசினார்.

முன் மருத்துவ ஆய்வுகளின் உயிரியல் மருத்துவ பயன்பாட்டு உத்திகளுக்கான புதிய வடிவமைக்கப்பட்ட நானோ பொருட்கள் மற்றும் உயிர் பொருட்கள் குறித்து தொழிலதிபர் ஜெகதீஸ்வரன் பேசினார்.

பேராசிரியர்கள் மல்லிகா, அனிதா, தினேஷ்கிருஷ்டி, ஜோதி, ராஜபூபதி, ரம்யா கலந்துகொண்டனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us