/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ருத்ரகோடீஸ்வரர் கோயில் மாசித்தேரோட்டம்ருத்ரகோடீஸ்வரர் கோயில் மாசித்தேரோட்டம்
ருத்ரகோடீஸ்வரர் கோயில் மாசித்தேரோட்டம்
ருத்ரகோடீஸ்வரர் கோயில் மாசித்தேரோட்டம்
ருத்ரகோடீஸ்வரர் கோயில் மாசித்தேரோட்டம்
ADDED : பிப் 24, 2024 04:08 AM

சிங்கம்புணரி : சிங்கம்புணரி அருகே சதுர்வேதமங்கலம் ஆத்மநாயகி ருத்ரகோடீஸ்வரர் கோயில் மாசித் தேரோட்டம் நடந்தது.
குன்றக்குடி ஆதீனத்துக்கு உட்பட்ட இக்கோயிலின் மாசிமகத் திருவிழா பிப். 15ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 9ம் திருவிழாவான நேற்று தேரோட்டம் நடந்தது.
இதையொட்டி காலை 9:00 மணிக்கு சுவாமி அம்பாளுடன் திருத்தேரில் எழுந்தருளினார். மதியம் 3:30 மணிக்கு குன்றக்குடி பொன்னம்பல அடிகள் தேரோட்டத்தை துவக்கி வைத்தார்.
விநாயகர், சுப்ரமணியர் சிறிய தேர்களில் முன்னே செல்ல, பெரிய தேரை பக்தர்கள் வடம்பிடித்து இழுத்தனர். தொடர்ந்து அம்பாள், சண்டிகேஸ்வரர் சப்பரங்கள் சென்றது.
வழி நெடுகிலும் பெண்கள் அர்ச்சனை செய்து வழிபட்டனர். மாலை 6:30 மணிக்கு தேர் நிலையை அடைந்தது.