/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/பெண்ணிடம் ஆன்லைனில் ரூ.9.26 லட்சம் மோசடிபெண்ணிடம் ஆன்லைனில் ரூ.9.26 லட்சம் மோசடி
பெண்ணிடம் ஆன்லைனில் ரூ.9.26 லட்சம் மோசடி
பெண்ணிடம் ஆன்லைனில் ரூ.9.26 லட்சம் மோசடி
பெண்ணிடம் ஆன்லைனில் ரூ.9.26 லட்சம் மோசடி
ADDED : ஜன 05, 2024 04:34 AM
சிவகங்கை : சிவகங்கை அண்ணா நகரை சேர்ந்தவர் 34 வயது பெண். இவர் பேஸ்புக்கில் வரும் விளம்பரங்களை பார்த்து பகுதி நேர வேலை தேடியுள்ளார்.
பேஸ்புக்கில் வந்த விளம்பரத்தில் பண முதலீட்டு மாதிரிகள் வந்துள்ளது. @galland என்ற டெலிகிராம் ஐடியில் இருந்து அனுப்பிய யு.பி.ஐ. ஐடி மற்றும் வங்கிக் கணக்கு எண்களுக்கு பணம் அனுப்ப ஒருவர் பேசியுள்ளார். அதைநம்பிய அந்த பெண் 20 தவணைகளாக ரூ.9 லட்சத்து 26 ஆயிரத்து 069 பணத்தை அனுப்பியுள்ளார்.
பணத்தை பெற்றுகொண்ட அந்த நபர் முதலீடு செய்த பணத்திற்கு லாபம் தராமலும் மேலும் பணம் கேட்டு தன்னை ஏமாற்றி வருவதாகவும், இழந்த பணத்தை மீட்டு தருமாறு அந்த பெண் சிவகங்கை சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். சைபர் கிரைம் போலீசார் விசாரிக்கின்றனர்.