Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ரூ. 1 லட்சம் கையாடல்

ரூ. 1 லட்சம் கையாடல்

ரூ. 1 லட்சம் கையாடல்

ரூ. 1 லட்சம் கையாடல்

ADDED : ஜன 06, 2024 12:00 AM


Google News
சிவகங்கை:சிவகங்கை மாவட்ட விளையாட்டுத் துறை அலுவலகத்தில் 2019ல் மாவட்ட விளையாட்டு அலுவலராக பணிபுரிந்தவர் கீதா.

இவர் 2018 - 2019ம் ஆண்டுக்கான முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகளை நடத்தினார். இதற்காக 8.70 லட்சம் ரூபாயை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஒதுக்கியது.

ஆனால், மாநில போட்டிக்கு தேர்வான 179 வீரர்களுக்கு மூன்று நாட்கள் பயிற்சி நடத்தியதாக ஆவணங்களை தயாரித்த கீதா, 1 லட்சத்து 23,400 ரூபாய் கையாடல் செய்து உள்ளார்.

அவர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் கடந்தாண்டு ஜனவரியில் வழக்குப் பதிவு செய்தனர். ஏற்கனவே கீதாவிடம் விசாரணை நடத்திய நிலையில், மாநில போட்டிக்கு தேர்வான வீரர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us