ADDED : ஜன 29, 2024 05:48 AM
சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே கிணற்றில் விழுந்து தத்தளித்த பசுமாடு உயிரோடு மீட்கப்பட்டது.
வேங்கைப்பட்டி செவகாடு பகுதியைச் சேர்ந்தவர் சக்தி.
இவரது பசுமாடு நேற்று இவருக்கு சொந்தமான 50 அடி ஆழ கிணற்றில் விழுந்து தண்ணீரில் தத்தளித்தது. இதுபற்றி சிங்கம்புணரி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து நிலைய அலுவலர் பிரகாஷ் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று கயறு கட்டி போராடி பசுமாட்டை உயிருடன் மீட்டனர்.