ADDED : ஜன 05, 2024 04:33 AM

மானாமதுரை : துாத்துக்குடி மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ள சேதத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக மானாமதுரை எம்.எல்.ஏ.,அலுவலகத்திலிருந்து ரூ.7 லட்சம் மதிப்புள்ள அரிசி மற்றும் பருப்பு,மளிகை பொருட்களை எம்.எல்.ஏ தமிழரசி அனுப்பி வைத்தார்.
முன்னாள் எம்.எல்.ஏ.,மதியரசன் கண்ணமங்கலம் கூட்டுறவு சங்கத் தலைவர் தமிழரசன், நிர்வாகிகள் கடம்பசாமி, முருகன், திருமுருகன்,மன்னர் மன்னன் கலந்து கொண்டனர்.