ADDED : ஜூன் 26, 2025 02:19 AM
காரைக்குடி:சிவகங்கைமாவட்டம் புதுவயலை சேர்ந்த உய்யவந்தான் மகள் ஜெயா 25. கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்து வசித்தார். 8 மாத கர்ப்பிணியான ஜெயா வீட்டின் அருகில் இருந்த கிணற்றில் வாளிமூலம் தண்ணீர் இறைக்க சென்றார்.
ஆனால் எதிர்பாராதவிதமாக கிணற்றுள் தவறி விழுந்து இறந்தார். சாக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.