Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/போலீஸ் டிரான்ஸ்பர் கவுன்சிலிங்: 180 பேர் மாற்றம்

போலீஸ் டிரான்ஸ்பர் கவுன்சிலிங்: 180 பேர் மாற்றம்

போலீஸ் டிரான்ஸ்பர் கவுன்சிலிங்: 180 பேர் மாற்றம்

போலீஸ் டிரான்ஸ்பர் கவுன்சிலிங்: 180 பேர் மாற்றம்

ADDED : ஜன 08, 2024 06:05 AM


Google News
சிவகங்கை, : மாவட்டத்தில் தொடர்ந்து ஒரே சப்டிவிஷனில் 5 ஆண்டுக்கு மேல் பணிபுரிந்த சிறப்பு எஸ்.ஐ.,க்கள் உட்பட 180 போலீசாரை கவுன்சிலிங் மூலம் டிரான்ஸ்பர் உத்தரவை எஸ்.பி., பி.கே., அர்விந்த் வழங்கினார்.

எம்.பி., தேர்தலையொட்டி ஒரே சப் --- டிவிஷனில் தொடர்ந்து 3 ஆண்டிற்கு மேல் பணிபுரிந்த போலீசாரை டிரான்ஸ்பர் செய்ய தேர்தல் கமிஷன் உத்தரவிட்டது. இதையடுத்து சிவகங்கை ஆயுதப்படை பிரிவில் சிறப்பு எஸ்.ஐ.,க்கள், போலீசாருக்கான டிரான்ஸ்பர் கவுன்சிலிங்கை எஸ்.பி., நடத்தினார். திரையில் வெளியிடப்பட்ட காலியிடங்களை போலீசார் தேர்வு செய்தனர். அவர்களுக்கான உத்தரவை எஸ்.பி., வழங்கினார். அந்த வகையில் 25 சிறப்பு எஸ்.ஐ.,க்கள் உட்பட 180 போலீசாருக்கு டிரான்ஸ்பர் வழங்கப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us