Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/போலீஸ் செய்திகள்:

போலீஸ் செய்திகள்:

போலீஸ் செய்திகள்:

போலீஸ் செய்திகள்:

ADDED : ஜன 08, 2024 06:17 AM


Google News
கார் மோதி மூதாட்டி பலி

திருப்புத்தூர்: திருப்புத்துார் அருகே தம்பிபட்டி மாணிக்கம் மனைவி வள்ளிக்கண்ணு 78. இவர் திருப்புத்துார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று முன்தினம் இரவு 7:00 மணிக்கு மருத்துவமனை எதிரே மதுரை ரோட்டை கடந்து சென்றார். அப்போது மதுரை நோக்கி சென்ற கார் மோதியதில் காயமுற்று, மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.

தற்கொலை

சிவகங்கை: சிவகங்கை அருகே ஒக்கூர் லிங்கம் 49. இவர் வெளிநாட்டில் வேலை செய்து, கடந்த 4 மாதங்களுக்கு முன் சொந்த ஊருக்கு வந்துள்ளார். குடும்ப பிரச்னையில் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்தார். மதகுபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

* காளையார்கோவில் பகுதியை சேர்ந்த 8 ம் வகுப்பு மாணவி. இவர் அரையாண்டு தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்ததால், பெற்றோர் திட்டுவார்கள் என பயந்து, வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.

மணல் திருட்டு டிராக்டர் பறிமுதல்

தேவகோட்டை: தேவகோட்டை தாலுகா போலீசார், தேனாற்றில் மணல் திருட்டை தடுக்க வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கண்ணங்குடி அருகே தேவரேந்தல் கிராமம் அருகே தேனாற்றில் மண் அள்ளும் இயந்திரம், டிராக்டர் நின்றிருந்தது. போலீசார் அவற்றை பறிமுதல் செய்து, தப்பியோடிய டிரைவர்களை தேடி வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us