ADDED : பிப் 25, 2024 06:34 AM
இளையான்குடி : இளையான்குடி அருகே மாதவன் நகர் காலனியில் உள்ள மாரியம்மன் கோவிலில் திருவிழா நடைபெற்று வருகிறது. அப்பகுதி மக்கள் இளையான்குடி, காளையார் கோவில் ரோட்டில் பேனர் வைத்திருந்தனர். சிலர் அதை கிழித்ததை தொடர்ந்து மாதவன் நகர் மக்கள் பேனரை கிழித்தவர்களை கைது செய்யக் கோரி இளையான்குடி, காளையார் கோவில் ரோட்டில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இளையான்குடி போலீசார் பேச்சு வார்த்தை நடத்தினர்.