Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ ரோடு தரத்தை கண்காணிக்க உத்தரவு

ரோடு தரத்தை கண்காணிக்க உத்தரவு

ரோடு தரத்தை கண்காணிக்க உத்தரவு

ரோடு தரத்தை கண்காணிக்க உத்தரவு

ADDED : ஜூன் 27, 2025 11:49 PM


Google News
மானாமதுரை: மானாமதுரை நகராட்சி கூட்டம் தலைவர் மாரியப்பன் கென்னடி தலைமையில் நடந்தது. துணைத் தலைவர் பாலசுந்தரம் வரவேற்றார் .நகராட்சி கமிஷனர் ஆறுமுகம் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் நடந்த விவாதங்கள்:

தேன்மொழி, தி.மு.க., கவுன்சிலர்: வார்டில் தொட்டி பழுதடைந்துள்ளதால் குடிநீர் கிடைக்காமல் மக்கள் திண்டாடி வருகின்றனர்.

தலைவர் மாரியப்பன் கென்னடி: மானாமதுரை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள 186 தொட்டிகளையும் ஆய்வு செய்து சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

நம் கோடி(எ) முனியசாமி பா.ஜ., கவுன்சிலர்: தற்போது போடப்பட்ட தார் ரோடுகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளதால் அதனை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தலைவர் மாரியப்பன் கென்னடி: தாரின் தரம் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.ரோடு போடும் போது அதிகாரிகள் உடன் இருந்து கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us