ADDED : செப் 22, 2025 03:42 AM

சிவகங்கை : சிவகங்கை அருகே சக்கந்தியில் வடமாடு மஞ்சுவிரட்டு நடந்தது. இதில் 15 காளைகள், 135 மாடு பிடி வீரர்கள் பங்கேற்றனர்.
காளை முட்டியதில் 4 பேர் காயமுற்றனர். பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த காளைகள் வரவழைக்கப்பட்டு, ஒவ்வொரு காளைக்கும் 25 நிமிடம் ஒதுக்கி கயிற்றில் கட்டி வைக்கின்றனர். அந்த காளையை அடக்க 9 வீரர்கள் இறக்கிவிடப்பட்டனர்.
காளையை அடக்கிய வீரர்களுக்கும், அடங்காத காளையின் உரிமையாளருக்கு பரிசு வழங்கப்பட்டது. காளையார்கோவிலில் வடமாடு மஞ்சுவிரட்டில் 11 காளைகளும், 99 மாடு பிடி வீரர்கள் பங்கேற்றனர்.