ADDED : பிப் 10, 2024 04:55 AM
காரைக்குடி: கோவிலூர் நாச்சியப்ப சுவாமிகள் கல்லூரியில் ஸ்பாஷ் தொழுநோய் ஒழிப்புத்திட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது.
நாராயண தேசிக சுவாமிகள் வாழ்த்தினார். முதல்வர் சந்திரமோகன் தலைமை வகித்தார். கல்லூரி தாளாளர் வீரப்பன், தொழுநோய் ஒழிப்பு குறித்து டாக்டர் கவிதாராணி பேசினர். தேசிய மருத்துவ சேவையிலிருந்து சுப்புரெட்டி வேங்கடசுப்ரமணியன் முத்துராமலிங்கம் பிரியதர்ஷினி போதும்பொண்ணு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கணினி துறை தலைவர் கலா நன்றி கூறினார்.
கல்லலில் செம்பனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் தொழுநோய் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
முருகப்பா மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் அழகப்பன் மாவட்ட நலக் கல்வியாளர் சுப்பு ரெட்டி முன்னிலை வகித்தனர்.
மருத்துவ அலுவலர் வள்ளியப்பன் தொடங்கி வைத்தார்.