/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/'அறிவு பசி போக்கும் உணவு புதையல் புத்தகம்' : சிவகங்கை புத்தக கண்காட்சி இன்றே கடைசி'அறிவு பசி போக்கும் உணவு புதையல் புத்தகம்' : சிவகங்கை புத்தக கண்காட்சி இன்றே கடைசி
'அறிவு பசி போக்கும் உணவு புதையல் புத்தகம்' : சிவகங்கை புத்தக கண்காட்சி இன்றே கடைசி
'அறிவு பசி போக்கும் உணவு புதையல் புத்தகம்' : சிவகங்கை புத்தக கண்காட்சி இன்றே கடைசி
'அறிவு பசி போக்கும் உணவு புதையல் புத்தகம்' : சிவகங்கை புத்தக கண்காட்சி இன்றே கடைசி

அறிவு பசிக்கு உணவளிக்கும் புதையல்
புத்தகம் கையில் இருந்தால் படிப்பதற்கு ஒரு தடையும் இல்லை. அறிவு பசிக்கு உணவளிக்கும் ஒரே புதையல் புத்தகம் மட்டுமே. அந்த புதையல் கிடைக்கும் பொக்கிஷ பூமியாக சிவகங்கையில் புத்தக கண்காட்சி மற்றும் திருவிழா அமைந்துள்ளது. இன்றே கடைசி நாளாக இருந்தாலும், காலை 10:00 முதல் இரவு 10:00 மணி வரை கண்காட்சி திறந்திருக்கும். 110 ஸ்டால்களில் 10 ஆயிரம் தலைப்புகளில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் கண்காட்சியை அலங்கரிக்கின்றன. அனுமதி இலவசம். புத்தக விலையில் 10 சதவீத தள்ளுபடி உண்டு. இவை தவிர பள்ளி, கல்லுாரி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள், பேச்சாளர்களின் சிறப்புரை அரங்கை அலங்கரிக்கின்றன. வாசிப்பை நேசிக்க செய்யும் இப்புத்தக கண்காட்சி ஆண்டுதோறும் உற்சாகத்தோடு நடைபெற வேண்டும் என புத்தக ஆர்வலர்கள் தங்கள் ஆவலை தெரிவிக்கின்றனர்.
ரூ.1,000 மதிப்புள்ள புத்தகங்கள் இலவசம்
புத்தகத்திருவிழா அரங்கு 57 ல் தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் அரங்கு இடம் பெற்றுள்ளது. இங்கு தினமலர் நாளிதழின் ஆண்டு சந்தா ரூ.1999 ரொக்கம் அல்லது ஆன்லைன் அல்லது காசோலை மூலம் செலுத்தினால், ரூ.1,000 மதிப்புள்ள புத்தகம் இலவசம். புத்தகத்திற்கு 10 சதவீதம் தள்ளுபடியும் உண்டு.