/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ சென்னை ஐ.ஐ.டி.,க்கு தேர்வான கீழடி மாணவர் சென்னை ஐ.ஐ.டி.,க்கு தேர்வான கீழடி மாணவர்
சென்னை ஐ.ஐ.டி.,க்கு தேர்வான கீழடி மாணவர்
சென்னை ஐ.ஐ.டி.,க்கு தேர்வான கீழடி மாணவர்
சென்னை ஐ.ஐ.டி.,க்கு தேர்வான கீழடி மாணவர்
ADDED : ஜூன் 21, 2025 12:00 AM

கீழடி: சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் தாலுகாவில் உள்ள கீழடியைச் சேர்ந்த அரசு பள்ளி மாணவர் முகமது பாட்ஷா ஜே.இ.இ., தேர்வில் வெற்றி பெற்று சென்னை ஐ.ஐ.டி.,யில் பயில தேர்வாகி உள்ளார்.
கீழடியைச் சேர்ந்த அக்பர்அலி - பௌசியா பேகம் மகன் முகமது பாட்ஷா 17, கீழடி அரசு பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை படித்தார். 10ம் வகுப்பில் 325 மதிப்பெண், 12ம் வகுப்பில் 562 மதிப்பெண் பெற்றார்.
கடந்த மேயில் நடந்த ஜே.இ.இ., நுழைவுத்தேர்வில் 239 மதிப்பெண் பெற்றார். மாற்றுத்திறனாளிகள் இட ஓதுக்கீட்டு பிரிவில் தேசிய அளவில் 88வது ரேங்க் பெற்ற இவர் சென்னை ஐ.ஐ.டி.,யில் பி.டெக்., மெட்டலர்ஜி அண்ட் மெட்டீரியல்
இன்ஜினியரிங் பிரிவில் கல்வி பயில தேர்வு செய்யப்பட்டுள்ளார். மாணவரை பள்ளி தலைமையாசிரியர் மதுசூதனன், வழிகாட்டி ஆசிரியர் விஸ்வநாதன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் வெங்கடசுப்ரமணியன் பாராட்டினர்.