/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/கல்லல் - காரைக்குடி சாலை அகலப்படுத்தும் பணி துரிதம்கல்லல் - காரைக்குடி சாலை அகலப்படுத்தும் பணி துரிதம்
கல்லல் - காரைக்குடி சாலை அகலப்படுத்தும் பணி துரிதம்
கல்லல் - காரைக்குடி சாலை அகலப்படுத்தும் பணி துரிதம்
கல்லல் - காரைக்குடி சாலை அகலப்படுத்தும் பணி துரிதம்
ADDED : ஜன 07, 2024 04:35 AM

காரைக்குடி: நெடுஞ்சாலை துறை சார்பில் கல்லல் - காரைக்குடி சாலையை அகலப்படுத்தும் பணி நடந்து வருகிறது.
சிவகங்கை மாவட்டத்தில், பி.பி.எம்.சி., திட்டத்தின் கீழ் ரூ. 500 கோடி மதிப்பீட்டில் மாநில நெடுஞ்சாலை மற்றும் மாவட்ட சாலைகள் அகலப்படுத்தும் பணி நடந்து வருகிறது. இதில், காரைக்குடி கோட்டையூர் பள்ளத்துார், கண்டனுார் உட்பட பல பகுதிகளில் சாலை அகலப்படுத்தும் பணி நடந்தது.
தற்போது, கல்லல் மற்றும் கூத்தலுார் முதல் ஆலங்குடி விலக்கு வரை காரைக்குடி சாலையில் அகலப்படுத்தும் பணி நடந்து வருகிறது. 7 மீட்டராக இருந்த சாலையானது 10.5 மீட்டராக அகலப்படுத்தி சாலை உறுதிப்படுத்தும் பணி நடந்து வருகிறது.