ADDED : ஜன 05, 2024 04:39 AM
கீழடி ; கீழடி அருகே சொட்டதட்டி ஊராட்சி அலுவலக கட்டட திறப்பு விழா நடந்தது. ஊராட்சி தலைவர் ரேவதிசக்திமுருகன் தலைமை வகித்தார்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் 25 லட்சத்து 99 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட புதிய ஊராட்சி அலுவலக கட்டடத்தை கூட்டுறவு துறை அமைச்சர் பெரியகருப்பன் திறந்து வைத்தார்.
விழாவில் கலெக்டர் ஆஷா அஜித், எம்.எல்.ஏ., தமிழரசி, திருப்புவனம் பேரூராட்சி தலைவர் சேங்கைமாறன், பி.டி.ஓ.,சத்யன் பங்கேற்றனர். துணைத்தலைவர் திருப்பதி நன்றி கூறினார்.