/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/திருப்புத்துாரில் ஜன.11ல் அனுமன் ஜெயந்திதிருப்புத்துாரில் ஜன.11ல் அனுமன் ஜெயந்தி
திருப்புத்துாரில் ஜன.11ல் அனுமன் ஜெயந்தி
திருப்புத்துாரில் ஜன.11ல் அனுமன் ஜெயந்தி
திருப்புத்துாரில் ஜன.11ல் அனுமன் ஜெயந்தி
ADDED : ஜன 07, 2024 04:35 AM
திருப்புத்துார்: திருப்புத்துார் மேலக்கோட்டை வீர ஆஞ்சநேயர் கோயிலில் ஜன.11 ல் அனுமன் ஜெயந்தி நடைபெறுகிறது.
மன்னர்கள் காலத்திலிருந்து கோட்டையின் வட மேற்கு திசையில் இக்கோயில் அமைந்துள்ளது. அனுமன் இங்கு நின்ற கோலத்தில் எழுந்தருளியுள்ளார்.
இக்கோயிலில் அனுமன் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. ஜன.11ல் அதிகாலை 4:00 மணிக்கு நடைதிறந்து மார்கழி பூஜை நடைபெறும் .
தொடர்ந்து காலை 7:00 மணிக்கு மூலவருக்கு அபிேஷகம் நடைபெறும். பின்னர் வடைமாலையுடன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலிப்பார். தொடர்ந்து தீபாராதனை நடைபெறும். பின்னர் மாலை 4:00 மணிக்கு வெண்ணெய்க்காப்பு அலங்காரத்தில் அருள்பாலிப்பார்.
மாலை 6:00 மணிக்கு உற்ஸவர் தீபாராதனையும் தொடர்ந்து திருவீதி உலாவும் நடைபெறும்.
நின்ற நாராயணப்பெருமாள் கோயிலில் காலை 10:00 மணிக்கு பக்த ஆஞ்சநேயருக்கு அபிஷேகம், திருவாராதனமும் நடைபெறும்.
மாலை 4:00 மணிக்கு வெண்ணெய் காப்பு அலங்காரத்தில் அருள்பாலிப்பார்.