ADDED : ஜன 11, 2024 04:25 AM
சிவகங்கை : சிவகங்கை எஸ்.பி., அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் எஸ்.பி., அர்விந்த் தலைமையில் நடந்தது. எஸ்.பி.,மக்களிடம் மனுக்களை பெற்று விசாரித்தார். இதில் 41 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது.
ஏ.டி.எஸ்.பி., இன்ஸ்பெக்டர்கள், எஸ்.ஐ.,க்கள் உட்பட போலீசார் கலந்து கொண்டனர்.