ADDED : செப் 12, 2025 04:19 AM
சிவகங்கை: தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தால் இரண்டாம் நிலைக் காவலர், இரண்டாம் நிலை சிறைக் காவலர் மற்றும் தீயணைப்பாளர் உள்ளிட்ட மொத்தம் 3 ஆயிரத்து 665 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இத்தேர்விற்கான இலவசப் பயிற்சி வகுப்பு இன்று முதல் சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் காலை 10:30 மணி முதல் மதியம் 1:30 மணி வரை நடைபெறவுள்ளது. போலீஸ் தேர்விற்கு விண்ணப்பித்து பயிற்சி பெற விரும்புவோர் இந்த பயிற்சி வகுப்பில் பயன்பெறலாம்.