ADDED : செப் 09, 2025 04:07 AM
இளையான்குடி: இளையான்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் 100 நாள் வேலையை முழுமையாக வழங்க வேண்டும், மத்திய அரசு இதற்கான நிதியை முழுமையாக ஒதுக்க வேண்டும், அந்த நிதியை மாற்றுப் பணிகளுக்கு ஒதுக்கீடு செய்யக்கூடாது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட குழு உறுப்பினர் ராஜூ தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
விவசாயிகள் சங்க மாவட்ட துணை தலைவர் அழகர்சாமி, ஒன்றிய செயலாளர் விஜயன், மற்றும் அமலி ஆரோக்கிய செல்வராஜ், பொன்னுசாமி உட்பட ஏராளமான நிர் வாகிகள் கலந்து கொண்டனர்.