ADDED : ஜன 13, 2024 05:39 AM
தேவகோட்டை : தேவகோட்டை நகராட்சி அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா நகராட்சி தலைவர் சுந்தரலிங்கம் தலைமையில் நடந்தது. நகராட்சி பணியாளர்கள் அலுவலகம் முன்பு கோலமிட்டு அலங்காரம் செய்து இருந்தனர். துணை தலைவர் முன்னிலையில் நகராட்சி கமிஷனர் பார்கவி பொங்கல் வைத்தார்.
தேவகோட்டை ஒன்றிய அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா ஒன்றிய தலைவர் பிர்லா கணேசன் தலைமையில் அலுவலகம் முன்பு நடந்தது. துணை தலைவர் ராசாத்தி, பி.டி.ஓ.க்கள் பாலகிருஷ்ணன், விஜயகுமார், முன்னிலை வகித்தனர். பொங்கல் வைத்து பூஜை செய்தனர். நிகழ்ச்சியில் மேலாளர் புவனேஸ் , ஒன்றிய கவுன்சிலர்கள், துணை பி.டி.ஓ.க்கள், பொறியாளர்கள் , அனைத்து பணியாளர்கள் பங்கேற்கின்றனர்.