Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ மூதாட்டியிடம் ரூ.34.5 லட்சம் மோசடி

மூதாட்டியிடம் ரூ.34.5 லட்சம் மோசடி

மூதாட்டியிடம் ரூ.34.5 லட்சம் மோசடி

மூதாட்டியிடம் ரூ.34.5 லட்சம் மோசடி

ADDED : மார் 28, 2025 05:38 AM


Google News
திருப்புத்துார் : திருப்புத்துார் மின்நகரில் வசித்தவர் பிரபாகர். அதே பகுதியைச் சேர்ந்தவர் உடையான் மகன் கண்ணன்52. இவர்கள் இருவரும் நெருங்கிய பழக்கம் உள்ளவர்கள்.

பிரபாகர் இறந்தவுடன் அவரது மனைவி ஜெயமணி 72, க்கும், வெளிநாட்டில் உள்ள ஜெயமணியின் மகன் ராஜாராம் ஆகியோரின் வங்கி பணிகளுக்கு இவர் உதவியுள்ளார்.

அப்போது மூதாட்டியின் வங்கி ஏ.டி.எம் மற்றும் காசோலை மூலம் வரவு செலவுகளையும் செய்துள்ளார். கண்ணன் தனது வங்கிக் கணக்கிற்கு பணத்தை மாற்றியுள்ளார்.

கோர்ட் உத்தரவிட்ட நிலையில் திருப்புத்துார் போலீசார் விசாரித்தனர். கண்ணன், மூதாட்டி ஜெயமணி வங்கிக் கணக்கில் இருந்து ரூ 34.5 லட்சம் வரை மோசடி நடந்தது தெரியவந்தது. இன்ஸ்பெக்டர் பெரியார், கண்ணனைக் கைது செய்து விசாரிக்கிறார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us