Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/தேவப்பட்டு மஞ்சுவிரட்டு; சீர்வரிசையுடன் வந்த பெண்கள்

தேவப்பட்டு மஞ்சுவிரட்டு; சீர்வரிசையுடன் வந்த பெண்கள்

தேவப்பட்டு மஞ்சுவிரட்டு; சீர்வரிசையுடன் வந்த பெண்கள்

தேவப்பட்டு மஞ்சுவிரட்டு; சீர்வரிசையுடன் வந்த பெண்கள்

ADDED : ஜன 30, 2024 11:50 PM


Google News
Latest Tamil News
காரைக்குடி : கல்லல் ஒன்றியத்துக்குட்பட்ட தேவபட்டு கிராமத்தில், ஆண்டுதோறும் அந்தரநாச்சியம்மனுக்கு செவ்வாய் பொங்கல் விழாவை முன்னிட்டு மஞ்சு விரட்டு நடைபெறும்.

நேற்று காலை பாரம்பரிய முறையில் ஆண்கள் ஆற்றில் நீர் எடுத்து பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து மாலையில் பெண்கள் அம்மனுக்கு சீர்வரிசை எடுத்து வந்தனர். தொடர்ந்து 200க்கும் மேற்பட்ட கட்டு மாடுகள் அவிழ்த்து விடப்பட்டன.

மாலையில் நடந்த மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியில் சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன.

35 மாடு பிடி வீரர்கள் கலந்து கொண்டனர். வெற்றி பெற்ற காளைகளுக்கும் மாடுபிடி வீரர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. இதில், 14 பேர் காயம் அடைந்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us