ADDED : பிப் 25, 2024 06:32 AM

காரைக்குடி : காரைக்குடி அருகே உள்ள மானகிரி செட்டிநாடு பப்ளிக் பள்ளியில் மழலையர் பட்டமளிப்பு விழா நடந்தது. இதில், ஆரோ எஜுகேஷனல் சர்வீஸ் சிஇஓ., ஆர். மாலதி பட்டங்களை வழங்கினார்.
பள்ளி சேர்மன் எஸ்.பி., குமரேசன் மற்றும் சாந்தி வரவேற்றனர்.
துணை சேர்மன் அருண்குமார், பள்ளி முதல்வர் உஷா குமாரி வாழ்த்தினர். நிகழ்ச்சியில் மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து மழலையர்களுக்கு பட்டமளிப்பு விழா நடந்தது.