ADDED : ஜன 28, 2024 06:32 AM

சிவகங்கை, : சிவகங்கை காந்தி சிலை முன்பாக மாவட்ட காங்., சார்பில் மகாத்மா காந்தி குறித்து பேசிய கவர்னர் ரவியை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் சஞ்சய்காந்தி தலைமை வகித்தார்.
வட்டாரத் தலைவர்கள் மதியழகன், வேலாயுதம், செந்தில்குமார், மாரிமுத்து, மாநில இளைஞர் காங்., பொதுச்செயலாளர் ராஜீவ் பாரமலை, மாநில பொதுக்குழு உறுப்பினர் சோணை, திருப்புவனம் நகர் தலைவர் நடராஜன், மாவட்ட கவுன்சிலர் ஆரோக்கிய சாந்தா ராணி, மாவட்ட துணை தலைவர்கள் சண்முகராஜன், உடையார், அப்பாச்சி, சபாபதி, மோகன்ராஜ், மாவட்ட சிறுபான்மை பிரிவுத் தலைவர் சையது இப்ராஹீம், கவுன்சிலர்கள் விஜயகுமார், மகேஷ்குமார், புருேஷாத்தமன் கலந்து கொண்டனர்.