ADDED : செப் 11, 2025 07:04 AM
சிவகங்கை : சிவகங்கை தாலுகா எஸ்.ஐ., சக்திவேல், போலீசார் சாத்தரசன்கோட்டை கால்நடை மருத்துவமனை பின்புறம் சந்தேகம் படும் படி நின்ற இருவரை பிடித்து சோதனை செய்தனர்.
விசாரணையில் வைரம்பட்டி வசந்தகுமார் 25, அவரிடம் 3 கிலோ கஞ்சா இருந்தது உறுதி செய்யப்பட்டது. அவரை கைது செய்த போலீசார் 3 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.